Friday, 7 February 2020

பரிகார ஸ்தலங்கள்


Jothisha Acharya
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107

12_ராசிக்கு_உண்டான_வழிபாட்டு_தலங்கள் v

இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

#மேஷம் :

ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

#ரிஷபம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சுவாமியை வழிபட தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

#மிதுனம்

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

#கடகம்

திருசெந்தூரில் உள்ள மூவர் ஜீவ சாமாதிகளை வழிபட்டு வர நினைத்த காரியம் ஈடேறும்.

#சிம்மம்

தினமும் காலையில் விநாயகரை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

#கன்னி

சித்தர்களையும், குருமார்களையும் வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர மனோதைரியம் மேம்படும்.

#துலாம்

திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரரை வழிபட்டு வர முன்னோர்களின் ஆசிகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

#விருச்சிகம்

திருமருகலில் உள்ள இரத்தினகிரீசுவரரை வழிபட்டு வர அபிவிருத்தியும், சுபிட்சமும் உண்டாகும்.

#தனுசு

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட சிந்தனைத் தெளிவு உண்டாகும்.

#மகரம்

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் ராகு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் குறையும்.

#கும்பம்

வெள்ளிக்கிழமைதோறும் கருமாரி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர இன்னல்கள் மற்றும் கவலைகள் குறையும்.

#மீனம்

திருவண்ணாமலை, திருக்குரங்கனில் முட்டத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு வர தடைகள் நீங்கி உயர்வும், மேன்மையும் உண்டாகும்.

No comments:

Post a Comment

ராகு

ராகு - காரகத்துவம் : * ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்...