Friday, 21 February 2020

நாடி ஜோதிடம் / கிரகமும் முக அமைப்பும்...


முக அமைப்பும் ஜோதிடமும்
---------------------------------------------

 ஜோதிடத்தில் கிரகங்களை உள்வட்ட கிரகங்கள்,வெளிவட்ட கிரகங்கள் என இரண்டு வகைகளாக பிரித்திருக்கிறார்கள்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள கிரகங்களும், சூரியனும் உள்வட்ட கிரகங்களாகும். அவை சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் உள் வட்ட கிரகங்களாகும்.

 பூமிக்கு வெளியே உள்ள செவ்வாய்,குரு,சனி ஆகிய மூன்று கிரகங்களும் வெளிவட்ட கிரகங்களாகும்.

முகத்தில்
கிரகங்கள் நிற்கும் இடங்கள்;
சூரியன் – வலது கண்
சந்திரன்- இடது கண்
செவ்வாய் – புருவம்
புதன் – நெற்றி
குரு – மூக்கு
சுக்கிரன் – கன்னம்
சனி – தாடை 

முகத்தில் உள்ள வெளி உறுப்புகளில் உள்வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் உள்வாங்கியது போல் முகத்தில் ஒட்டியது போல் தாழ்ந்தும்.

வெளி வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் வெளியே நீட்டியது போல் உயர்ந்தும் இருப்பதை காணலாம்.

 அதாவது புருவம்,மூக்கு,தாடை மூன்றும் கொஞ்சம் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.

மூக்கை குறிக்கும் கிரகம் குரு.

 பிருகு-நந்தி நாடி ஜோதிட முறையில் குருவுக்கு ஜீவக்காரகன் என்று பெயர். ஜீவன் என்றால் உயிர், பிராணன் என்று பொருள்படும்.

நாம் ஜீவித்திருப்பதற்கு மூக்கு நாசி வழியாக பிராண வாயுவை சுவாசிப்பதே காரணமாகும். இதனால் ஜீவக்காரகம் பெற்ற குரு முகத்தில் மூக்கை குறிக்கிறார்.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.
 சூரிய குடும்பத்தில் சூரிய ஓளியை நெரடியாகவும் அதிகமாகவும் பெறும் கிரகம் புதனாகும்.

முகத்தில் அதிகம் சூரிய ஒளி பெறும் உறுப்பு நெற்றியாகும் . இதனால் நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.

தாடையை
 குறிக்கும் கிரகம் சனி;

 சூரிய குடும்பத்தில் அதிக சூரிய ஒளியை பெறாமல் இருண்டு கிடக்கும் கிரகம் சனி. முகத்தில் சூரிய ஒளி குறைவாக விழும் உறுப்பு தாடையாகும்.
இதனால் தாடையை குறிக்கும் உறுப்பு சனியாகும்.

முகத்தில் ராஜ கிரகங்கள்
 ஜோதிடத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மற்றும் குரு ஆகிய நான்கு கிரகங்களும் ராஜ கிரகங்கள் எனப்படுகின்றன.

முகத்தில் கண்கள் , புருவம், மூக்கு இவை இல்லை என்றால் முகத்திற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும்.

 கண்களை குறிக்கும் சூரியன்,சந்திரன், புருவங்களைக்குறிக்கும் செவ்வாய்,

மூக்கை
குறிக்கும் குரு
ஆகிய நான்கு கிரகங்களும் முகத்திற்கு அடையாளம் தரும் ராஜ கிரகங்களாகும்.

 முகத்திற்கு மையமாக அமைந்திருப்பது இந்த உறுப்புகளே.

சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது
 ஜோதிடத்தில் சனியைப்போல் ராகு.

 செவ்வாயைப்போல் கேது என ஒரு வாசகம் உண்டு.

 முக அமைப்பும் இதை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது. அதாவது சனி் கிரகம் குறிக்கும் தாடைக்கு மிக அருகிலேயே ராகு கிரகம் குறிக்கும் வாய் அமைந்துள்ளது.

 நெற்றிக்கும், கண்களுக்கும் நடுவில் வளர்ந்திருக்கும் முடியை செவ்வாய் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. முடி கேதுவுக்குரியதாகும்.

 இதன் மூலம் சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது செயல்படும் என்ற கூற்று உண்மையாகிறது.

சூரியக் குடும்பமும் முக அமைப்பும்
 தலையின் ஒரு அங்கமாக முகம் அமைந்துள்ளது.

 முகத்தில் சிரசைக்குறிப்பது சூரியனாகும். தாடையைக்குறிப்பது சனியாகும்.

ராசிசக்கரத்தில்  சூரியனுடைய வீட்டிற்கு  நேர் எதிரே சனியின் வீடு அமைந்துள்ளது. இதே அமைப்பு முகத்திலும் அமைந்துள்ளது.

அதாவது சூரியனை குறிக்கும் சிரசு முகத்தின் மேல் பகுதியில்  சூரிய வெளிச்சம் அதிகமாக படும் இடத்தில் அமைந்துள்ளது.

 சனியை குறிக்கும் தாடை  முகத்தின் கீழ்ப்பகுதியில் வெளிச்சம் அதிகம் படாத இடத்தில்  அமைந்துள்ளது.

Friday, 7 February 2020

பரிகார ஸ்தலங்கள்


Jothisha Acharya
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107

12_ராசிக்கு_உண்டான_வழிபாட்டு_தலங்கள் v

இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

#மேஷம் :

ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

#ரிஷபம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சுவாமியை வழிபட தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

#மிதுனம்

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

#கடகம்

திருசெந்தூரில் உள்ள மூவர் ஜீவ சாமாதிகளை வழிபட்டு வர நினைத்த காரியம் ஈடேறும்.

#சிம்மம்

தினமும் காலையில் விநாயகரை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

#கன்னி

சித்தர்களையும், குருமார்களையும் வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர மனோதைரியம் மேம்படும்.

#துலாம்

திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரரை வழிபட்டு வர முன்னோர்களின் ஆசிகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

#விருச்சிகம்

திருமருகலில் உள்ள இரத்தினகிரீசுவரரை வழிபட்டு வர அபிவிருத்தியும், சுபிட்சமும் உண்டாகும்.

#தனுசு

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட சிந்தனைத் தெளிவு உண்டாகும்.

#மகரம்

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் ராகு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் குறையும்.

#கும்பம்

வெள்ளிக்கிழமைதோறும் கருமாரி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர இன்னல்கள் மற்றும் கவலைகள் குறையும்.

#மீனம்

திருவண்ணாமலை, திருக்குரங்கனில் முட்டத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு வர தடைகள் நீங்கி உயர்வும், மேன்மையும் உண்டாகும்.

பழனியில் தைப்பூசம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும்.
 மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.

 இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும்.
 ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார்.
 பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பழனி தைப்பூச விழா முடிந்ததும் ஒருநாளில் அருகில் உள்ள கிராமத்தினர் பழனிமலை வந்து இரவுமுழுவதும் தங்கி ஆடிப் பாடிக் கொண்டாடுகின்றனர்.
தைப்பூசத்துக்குப் பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.
 காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
  • அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
  • சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
  • பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தைப்பூசம் விரத முறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .

 மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . 
மக்கள்
கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால்
இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார்.

தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

Thursday, 6 February 2020

Jayalalitha jathakam

YouTube link
https://youtu.be/RHXRyoCYqJ8

Jothisha Acharya
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107

மேஷ ராசி /YouTube link

YouTube link...
https://youtu.be/NWZngQR0hk8

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..



ஜோதிஷ ஆச்சார்யா
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107


ராசி காரகத்துவம்


மேஷம் என்பது ஒரு சர ராசி இது  நெருப்பு தத்துவம் கொண்ட ராசி இதன்  பலன்கள் என்பது சுயநலம்
பேராசை
எதிலும் மூர்க்கத்தனம் இருக்கும்
கோபம் வேகம் எதிலும் முன்னுரிமை பெறுவதற்குண்டான முயற்சியை மேற்கொள்வார்கள்.

 பிடிவாத குணம் அச்சம் இல்லாமல் செயல்படுவது முட்டாள் தனமான நடவடிக்கைகள்  குறுகிய மனப்பான்மை இருக்கும் காரியத்தில் தடையை சந்தித்து  ஊதாரித்தனம் இருக்கும் ஆதிக்க உணர்வு விவேகமற்ற வேகம் கொடூரமான செயல்கள் இருக்கும் விரக்தியும் வேதனையும் இழப்பும் ஏமாற்றமும் இருக்கும்  சுதந்திரமான சுக  மேன்மை வம்ச விருத்தியின்மை இருக்கும்  வசதிகளுடன் கூடிய விதண்டா வாதங்களை   செய்வார்கள்  நம்பிக்கையுடன் கூடிய கபட தன்மை இருக்கும்.

போக உணர்வில்  நாட்டமின்மை குடும்பத்தில் பற்றின்மை தாய்மையை மதியா  தன்மை தலையில் நோய் மூளையில் வியாதி இல்லறத்தில் ஏமாற்றம் கஷ்டப்பட்டு வாழக் கூடிய அமைப்பு நார்த்தீக  உணர்வு அல்லது நாட்பட்ட இறைவழிபாடும் இருக்கும்  பெரும் பதவிக்காக எதையும் செய்யத்துணிவு இருக்கும் பொண்ணையும் பொருளையும் சுகத்தையும் காத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இந்த ராசிக்கு உண்டு நெருப்பு தத்துவம்  நிர்வாகத்தில் முதன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் தகுதியாகும்                                                         மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி  சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை கடவுள் முருகன்

மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை, செவ்வாய் ஆட்சி  சூரியன் உச்சம்  சனி நீச்சம்

மேஷத்திற்கு  2. ரிஷபம். ஸ்திர மான பேச்சு உடையவர் இவர்கள். சுக்கிரன் வீடு ஆதலால் இனிமையாக பேசுவார்கள்   லக்னம்  செவ்வாய். 2 சுக்கிரன் ஆகவே செவ்வாய் சுக்கிரன் காரணமாக வாகனம் பெண்கள் பற்றிய பேச்சு இருக்கும். இவருக்கு வருமானம் ஸ்திரமாக இருக்கும். ரிஷபம் பெண். ராசி பெண்கள் மற்றும் கலைத்துறை மூலமும் வருமானம் வரும் 2 ம்பாவத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது  இது சூரியனின் நட்சத்திரம் எனவே அரசு வழி வருமானம் இருக்கும். ரோகிணி என்றால் உணவு  சம்பந்தபட்ட தொழில் மூலம் விவசாய பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 2 ம் வீடு சுக்கிரன் வீடு அதனால் பணம் சந்தோஷமான முறையில் வரும்   

மேஷம் தாது ராசி,  கிழக்கு, ஆண்,நெருப்பு, தலை மேஷம் ராசியின் தொழில் அரசு உத்யோகம்  காவல்துறை ராணுவம் தீயணைப்புத்துறை விளையாட்டுத்துறை பொறியியல்துறை செங்கல்சூளை சுரங்கதொழில் அறுவை சிகிச்சை மருத்துவம் ஊர் பஞ்சாயத்து,ஸ்திரம்,தெற்கு, பெண்,நிலம்

மேஷத்திற்கு  3 ஆம் வீடு  மிதுனம். அதிபதி புதன் இது காற்று ராசி இவர்கள் இரட்டை தன்மை கொண்டவர்கள்.

மேஷம் ராசி என்பது காலபுருஷனின் முதல் வீடு வானியலில் இது முதல் ராசி இதன்  ராசியின் அதிபதி செவ்வாய்  செயலில் இது சரமாகவும் தத்துவத்தில் இது அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது  விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி  உருவத்தில் ஆடாகவும் நிறத்தில் சிகப்பும் இயல்பான நடையும் காடு போன்ற சிறு வனப்பகுதி ஆகவும் மூலத்தில் தாது ராசியாகவும் உள்ளது

மேஷம் காலபுருஷனுக்கு முதல் ராசி. எதிலும் துணிந்த செயல் தலைமை தாங்குதல் மற்றவரை தனக்கு அடிமை  ஆக்குதல் போன்ற குணம் இருக்கும்

மேஷ ராசி   முதல் ராசி என்பதால் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள்

மேஷம் திசை கிழக்கு. இது சர லக்னம் ஒற்றை ஆண் ராசி அதிபதி செவ்வாய் சூரியன் உச்சம் சனி நீச்சம் பெறுகிறார் ராசியின் தன்மை கொடூரம் இடம் புதர் காடு சின்னம் ஆடு. அகன்ற கண்களை உடையவர்கள் நிலையாக இல்லாமல் பயணம் செய்பவர்கள்

லக்னப்புள்ளி அசுவதி  என்றால் கிரிமினல் குணம்.  பரணி  என்றால் சிற்றின்ப பிரியர் கார்த்திகை என்றால் தலைகணம் உடையவர்

நெருப்பு ராசியாதலால் கோபம், ஆணவம் உடையவர்கள். சர ராசியாதலால் சுறு சுறுப்பானவர்கள் ஞானம் அதிகம் உடையவர்கள்

மேஷம் உஷ்ணம்.  தேகம் இருக்கும். மேஷம் தலை ராசி

மேஷம் ஆடு, ஆட்டு குட்டி.  

KP astrology in tamil/ welcome KP Astrology


ராகு

ராகு - காரகத்துவம் : * ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்...